Wednesday 14 October 2015

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்

              இலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் பாகம் -1 அக்டோபர் 11/2015 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூலில் 50 அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.



                நூல் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் நடைப்பெற்றது. அரங்கம் நிறைய மூத்த அறிவிப்பாளர்கள், கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.  விழாவிற்கு மூத்த ஒலிபரப்பாளர்கள் அனைவரும் வருகை தர, நேயர்களாகிய ரசிகர்கள் கூட்டம் அரங்கம் நிறைய தமிழ்ச் சங்கம் கலைக்கட்டத் தொடங்கியது. நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.

                 புகைப்படத்தில் என்னோடு இருப்பது மூத்த ஒலிபரப்பாளர் திரு. மயில்வாகனம் சர்வானந்தா, திரு.அருணா செல்லத்துரை, செல்வி.சத்சொரூபவதி நாதன் ஆகியோருடன் நான்.


1 comment: